நாகையில் பாஜக பிரமுகர் மீது தாக்குதல் - தொடரும் பதற்றம்
Dec 17 2017 5:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகையில் அடையாளம் தெரியாத நபர்களால் பா.ஜ.க. பிரமுகர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனை கண்டித்து, நாகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா உட்பட 500-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து, பின்னர் விடுதலை செய்தனர். ஆர்ப்பாட்டம் காரணமாக, அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இந்நிலையில், பா.ஜ.க. பிரமுகர் திரு. செல்வம் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். இதில், பலத்த காயம் அடைந்த அவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் நாகை மாவட்டத்தில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதனையடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.