கழக பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா ஒப்புதலுடன் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளரும், கழக துணைப் பொதுச் செயலாளருமான திரு.டிடிவி தினகரனுக்கு ஆதரவாக, கழக நிர்வாகிகள், தொண்டர்கள், தோழமைக் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா ஒப்புதலுடன், ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில், போட்டியிடும் வெற்றி வேட்பாளரும், கழக துணைப் பொதுச்செயலாளருமான திரு. டிடிவி தினகரன், ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில், பிரஷர் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரது வெற்றிக்கு வலுசேர்க்கும் விதமாக, கழக நட்சத்திர பேச்சாளர்களும், கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், மற்றும் தோழமைக் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களிடம் குக்கர் சின்னத்திற்கு வாக்குசேகரித்தனர்.
ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட, வைத்திய நாதன் பாலம், வினோபா நகர் பகுதியில் கழக இலக்கிய அணி செயலாளர் திரு.டேவிட் அண்ணா துரை, கழக செய்தித்தொடர்பாளர்கள் செல்வி.சி.ஆர். சரஸ்வதி, அப்சாரா ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அவர்கள், மறைந்த மாண்புமிகு அம்மா கட்டிக்காத்த மாநில அரசின் உரிமைகளை, ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணியினர் மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்டதாக குற்றம்சாட்டினர்.
41-வது வார்டுக்குட்பட்ட ஜெ ஜெநகர், கோவிந்தசாமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், வேளச்சேரி பகுதிக் கழகச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் வீதிவீதியாகச் சென்று, டிடிவி தினகரனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதேபோல், 41-வது வார்டுக்குட்பட்ட காமராஜர் சாலை, ஜீவா நகர், இளையா தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், திருவள்ளூர் மேற்கு மாவட்டக் கழகச்செயலாளர் ஏழுமலை தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பேரணியாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டக் கழகம் சார்பில், சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு. டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக, காஞ்சிபுரம் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மற்றும் குன்றத்தூர் ஒன்றிய கழகச் செயலாளர் மலைப்பட்டு திரு. ஆர். ராதாகிருஷ்ணன் தலைமையில், சுந்தரம்பிள்ளை நகர் மற்றும் நேதாஜி நகர் ஆகிய பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.