அம்மா வாழ்ந்த இல்லத்தில் வருமானவரி சோதனை நடத்தப்படக் காரணமானவர்கள், அரசியலில் இருந்து தூக்கி எறியப்படுவார்கள் - கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எச்சரிக்கை
Nov 20 2017 3:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அம்மா வாழ்ந்த இல்லத்தில், வருமானவரி சோதனை நடத்தப்படக் காரணமானவர்கள், அரசியலில் இருந்து தூக்கி எறியப்படுவார்கள் என கழக துணைப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் சுற்றுப்பயணத்தை முடித்த பிறகு, கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் நேற்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தந்தார். அங்குள்ள மீமிசல் பகுதியில், தகுதி நீக்கத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. ரத்தின சபாபதி தலைமையில் ஏராளமான கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, அவர்களிடையே பேசிய கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன், அம்மாவின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த சோதனை நடத்தப்பட காரணமாக இருந்தவர்கள், அரசியலில் இருந்து மக்களால் தூக்கி எறியப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.