தமிழக உரிமைகளை மத்திய அரசிடம் பறிகொடுத்துவிட்டு ஆளுநர் ஆய்வை கூட கண்டிக்காத மாநில அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் - மத்திய அரசு அரசியல் ஆதாயத்துக்காக வருமான வரித் துறையை பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு
Nov 19 2017 4:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக உரிமைகளை மத்திய அரசிடம் பறிகொடுத்துவிட்டு ஆளுநர் ஆய்வை கூட கண்டிக்காத மாநில அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு. முத்தரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், மத்திய அரசு அரசியல் லாபத்தை நிறைவேற்றுவதற்காக வருமான வரித் துறையை பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார். மறைந்த மாண்புமிகு அம்மா இல்லத்தில் நடைபெற்ற சோதனை குறித்து எடப்பாடியும், பன்னீர் செல்வமும் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது அவர்களது அடிமைத்தனத்தையே காட்டுகிறது என்றும் அவர் சாடியுள்ளார்.