வருமான வரித்துறையின் சோதனை மூலம், மாண்புமிகு அம்மா வாழ்ந்த கோயிலுக்கு துன்பம் நேர்ந்துள்ளது - ஜெயா தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரி விவேக் ஜெயராமன் பேட்டி - அம்மாவின் அறையில் சோதனை நடத்த அனுமதிக்கவில்லை எனவும் தகவல்
Nov 19 2017 1:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோடான கோடி கழகத் தொண்டர்களின் கோயிலாக பார்க்கப்படும் அம்மாவின் இல்லத்திற்கு, வருமான வரித்துறையினரின் சோதனை மூலம் துன்பம் வந்துள்ளதாக, ஜெயா தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரி விவேக் ஜெயராமன் தெரிவித்துள்ளார். வருமான வரித்துறையினரின் சோதனை, மிகுந்த மனவேதனை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோடிக்கணக்கான கழக தொண்டர்களும், தமிழக மக்களும் கோயிலாக வழிபடும், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் வாழ்ந்த சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்றிரவு திடீரென சோதனை மேற்கொண்டனர்.
இதையடுத்து தகவலறிந்து போயஸ் தோட்ட இல்லத்திற்கு வருகைதந்த ஜெயா தொலைக்காட்சி தலைமைச் செயல் அதிகாரி திரு.விவேக் ஜெயராமனுக்கு, போயஸ் தோட்ட இல்லத்திற்குள் செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதையடுத்து, கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, பின்னர் காவல்துறையினர் அவருக்கு அனுமதி அளித்தனர்.
பலமணி நேர சோதனைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயா தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரி விவேக் ஜெயராமன், கோடான கோடி கழகத் தொண்டர்களின் கோயிலாக பார்க்கப்படும் அம்மாவின் இல்லத்திற்கு, வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை மூலம் துன்பம் வந்துள்ளதாக, தெரிவித்தார். மிகுந்த மனவேதனை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் அறையை வருமான வரித்துறையினர் சோதனை நடத்த நாங்கள் அனுமதிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.