அரியலூரில் 15 நாட்களாக முறையாக மின்விநியோகம் வழங்கப்படாத அரசை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
Oct 20 2017 6:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரியலூர் மாவட்டத்தில் 15 நாட்களாக, முறையாக மின்விநியோகம் வழங்கப்படாத அரசை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சியிலுள்ள செல்லாண்டித்தெரு கொள்ளிட பாதை, வேளாளர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிகளுக்கு இரண்டு மின்மாற்றியிலிருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு மின்மாற்றியில் பழுது ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான நேரங்களில் குறைந்த மின்அழுத்த மின்சாரமே வழங்கப்பட்டதால் மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டுள்ளது. மேலும், மின்சாரமும் முறையாக வழங்கப்படவில்லை. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருமானூர் - ஏலாக்குறிச்சி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மின்வாரிய அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.