தார் கொள்முதல் செய்ததில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக வழக்கு - 4 வாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
Oct 20 2017 2:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக அரசு நெடுஞ்சாலைகளை அமைக்கவும், பராமரிக்கவும் தார் கொள்முதல் செய்ததில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை அறிக்கையை நான்கு வாரத்தில் தாக்கல் செய்ய சென்னை உயர்நீநிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெடுஞ்சாலைத் துறையில் தார் கொள்முதல் செய்ததில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பாலாஜி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரத்தில் முதல்தகவல் அறிக்கை பதியப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகின்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை அறிக்கையை 4 வாரத்தில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.