தரமணி-பழைய மகாபலிபுரம் சாலையை இணைக்கும் இணைப்பு சாலையில் குடிநீர்வாரியத்தால் தோண்டப்பட்ட பள்ளங்களில் மழை நீர் தேக்கம் : வாகன ஓட்டிகள் அவதி
Aug 19 2017 7:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் மாவட்டம் தரமணி-பழைய மகாபலிபுரம் சாலையை இணைக்கும் இணைப்பு சாலையில் குடிநீர்வாரியத்தால் தோண்டப்பட்ட பள்ளங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் ஆபத்தான வகையில், பயணம் மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பழைய மகாபலிபுரம் சாலையை இணைக்கும் எம்.ஜி.ஆர். இணைப்பு சாலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மெட்ரோ குடிநீர் வாரியத்தின் மூலம் குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. இதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முழுவதுமாக மூடப்படாமல் குண்டும் குழியுமாக அப்படியே விடப்பட்டுள்ளது. இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மிகுந்த சிரமத்துடன் பயணித்து வருகின்றனர். தற்போது மழை நீர் சாலையில் உள்ள பள்ளங்கள் முழுவதும் நிரம்பியுள்ளதால், வாகனங்களில் வருபவர்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால் அதிருப்தியடைந்துள்ள பொதுமக்கள் குடிநீர்வாரியம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் மீது சரமாரியாக குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.