மோட்டார் சைக்கிள் வாகனத்தின் மீது வேகமாக சென்றபடி தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய இளைஞர் - சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற சாகச நிகழ்ச்சி
Aug 15 2017 12:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை அருகே மோட்டார் சைக்கிள் வாகனத்தின் மீது வேகமாக சென்றபடி இளைஞர் ஒருவர் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தும் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டார்.
திருவண்ணாமலை அருகே இளுப்பந்தாங்கள் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞரான திரு. சந்தோஷ்குமார், இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பெற கடந்த 13 ஆண்டுகளாக பயிற்சி எடுத்து வருகிறார். இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தவாறே மடிக்கணினி இயக்குதல், இரு கைகளாலும் பந்துகளை போட்டு பிடித்தல் போன்ற பல்வேறு சாகசங்களை ஏற்கனவே நிகழ்த்தியுள்ளார். தற்போது நாட்டின் 71-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி இன்று மற்றொரு சாகசத்தில் ஈடுபட்டார்.
மக்களிடம் நாட்டுப்பற்று இருக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்த்தும் வகையில், திருவண்ணாமலை புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம்செய்தவாறே அதன்மீது ஏறி நின்றவாறே அவர் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினார்.
சந்தோஷ்குமாரின் இந்த சாகசத்தை அப்பகுதி மக்கள் பலரும் மிகவும் வியந்து பாராட்டினர். தொடர்ந்து இதுபோன்ற சாதனைகள் படைக்க அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.