குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கரடி - வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதி
Jun 24 2017 11:34AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குன்னூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கரடி மற்றும் காட்டெருமைகளை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.
நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்கள் அவ்வப்போது உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில், கோத்தகிரி அடுத்த பெப்பேன் குடியிருப்பு பகுதிக்குள், கரடி மற்றும் காட்டெருமை ஆகிய விலங்குகள் ஒரே நேரத்தில் புகுந்தன. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், கரடி மற்றும் காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் நிம்மதி பெருமூச்சு விட்ட பொதுமக்கள், வனத்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர். கரடி மற்றும் காட்டெருமைகள் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டதையடுத்து தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சமின்றி தங்கள் பணியை மேற்கொண்டுள்ளனர்.