டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தல் : தேர்தல் பணியாற்றுவது குறித்து பூத் கமிட்டி செயல்வீரர்களின் ஆலோசனைக் கூட்டம்
Mar 26 2017 12:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில், தேர்தல் பணியாற்றுவது குறித்து பூத் கமிட்டி செயல்வீரர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வருகிற 12-ம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத் தேர்தலையொட்டி 41-வது வட்டத்திற்கு உட்பட்ட எழில்நகர், கண்ணகி நகர், தேவி கருமாரியம்மன் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பூத் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் திரு. திண்டுக்கல் சி. சீனிவாசன், திரு. கடம்பூர் ராஜூ, திரு. பா. பென்ஜமின், கழக நாடாளுமன்றக் குழு தலைவர் திரு. பி.வேணுகோபால் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர் திரு. அலெக்சாண்டர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் கழகத்தினர் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இதேபோல், 47-வது வட்டத்திற்கு உட்பட்ட காமராஜர் நகர் பகுதியில் பூத் கமிட்டி நிர்வாகிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. சிறுணியம் பலராமன், திரு. ஏழுமலை மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து ஆலோசித்தனர்.