அமரர் எம்.ஜி.ஆர். உருவாக்கி, மாண்புமிகு அம்மா பெரும் புகழ் சேர்த்த அ.இ.அ.தி.மு.க.வை முடக்கிவிடவேண்டும் என்ற தீயநோக்கத்துடன் கழகத்தின் துரோகிகளோடு கைகேர்த்து தி.மு.க. உள்ளிட்ட சக்திகள் மேற்கொண்டுள்ள சதிமுறியடிக்கப்படும் : கழக துணைப் பொதுச் செயலாளர், ஆர்.கே. நகர் வேட்பாளர் TTV தினகரன் உறுதி
Mar 25 2017 9:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புரட்சித் தலைவர் அமரர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய மாபெரும் இயக்கமான அ.இ.அ.தி.மு.க.வை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்ற தீய நோக்கத்துடன், கழகத்தின் துரோகிகளோடு கைகோர்த்துக்கொண்டு தி.மு.க. உள்ளிட்ட சக்திகள் மேற்கொண்டுவரும் சதி, முற்றிலுமாக முறியடிக்கப்படும் என கழக துணைப் பொதுச் செயலாளரும், ஆர்.கே. நகர் தொகுதி வேட்பாளருமான திரு. TTV தினகரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைக் கழகத்தில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த திரு. TTV தினகரன், மாண்புமிகு அம்மாவின் வேட்பாளராக ஆர்.கே. நகர் தொகுதியில் தான், போட்டியிடுவதாக தெரிவித்தார். ஆர்.கே. நகர் தொகுதி அனைத்து வசதிகளுடன், இந்தியாவிலே முன்மாதிரித் தொகுதியாக திகழ, அம்மா செயல்படுத்திய அனைத்து திட்டங்களும் தொடர்ந்து நிறைவேற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.