மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் 69-வது பிறந்தநாள் விழா - பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தும், ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் அ.இ.அ.தி.மு.க.வினர் உற்சாகக் கொண்டாட்டம்

Feb 25 2017 8:15AM
எழுத்தின் அளவு: அ + அ -

மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் 69-வது பிறந்தநாள் விழா, தமிழகம் முழுவதும் அ.இ.அ.தி.மு.க. சார்பில் உற்சாகமாக் கொண்டாடப்பட்டது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மாண்புமிகு அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியும், பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தும், ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை கழகத்தினர் வெகுசிறப்பாகக் கொண்டாடினர்.

தென்சென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில், தியாகராய நகரில் ஏழை-எளியோருக்கு அன்னதானம் வழங்கி மாண்புமிகு அம்மாவின் 69-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

விழுப்புரம் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில், செஞ்சி அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைக்கு தங்க மோதிரத்தை அமைச்சர் திரு. சி.வி. சண்முகம் அணிவித்தார். தொடர்ந்து, நோயாளிகளுக்கு பழம், ரொட்டி உள்ளிட்டவற்றையும் அமைச்சர் வழங்கினார்.

மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம், எலவனாசூர் கோட்டையில், கட்டணமில்லா மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கர்ப்பிணி பெண்களுக்கு வளையல், மஞ்சள் உள்ளிட்ட மங்களப் பொருட்களுக்கு வழங்கப்பட்டன. இதேபோல், மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாம்களில் திரளானோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

அ.இ.அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில், மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாள் அன்று திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த 16 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் திரு. வெல்லமண்டி என். நடராஜன், திருமதி எஸ். வளர்மதி மற்றும் கழக எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலாளர் திரு. என்.ஆர். சிவபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருச்சி புறநகர் மாவட்ட கழகம் சார்பில், மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு பிரட், பழங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில், மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாள் அன்று பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர், புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில், ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்ட கழக மாணவரணி சார்பில், எளம்பலூரில் உள்ள முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் 69-வது பிறந்தநாளை முன்னிட்டு, நாகை மாவட்டம், செம்பனார்கோயில் வடக்கு ஒன்றியக் கழகம் சார்பில், ஆக்கூர் பள்ளி மாணவ-மாணவியருக்கு நோட்டு, புத்தகங்கள், எழுதுப்பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டன.

நாகை மாவட்ட அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில், மயிலாடுதுறை அரசுப் பேருந்து பணிமனையில், கழகக் கொடியினை ஏற்றிவைத்து, இனிப்புகள் வழங்கி மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாள் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

கடலூர் மேற்கு மாவட்டம், காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதி சார்பில், ஸ்ரீஅனுகிரக ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், சட்டமன்ற அலுவலகத்தில் உள்ள மாண்புமிகு அம்மாவின் திருவுருவச் சிலைக்கு கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில், மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அதியமான்கோட்டை அரசு பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியருக்கு நோட்டு புத்தகம், பேனா மற்றும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

பாப்பிரெட்டிப்பட்டியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மாண்புமிகு அம்மாவின் திருவுருவப் படத்திற்கு, கழகத்தினர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ந்தனர். கோயில்களில் சிறப்பு பூஜையுடன் அன்னதானமும் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் அடுத்துள்ள சாணார்பட்டியில், கழக ஒன்றியக் கழகம் சார்பில், 200 ஏழை-எளியோருக்கு விலையில்லா வேட்டி, சேலைகளும், பள்ளி மாணவ-மாணவியருக்கு இனிப்புகளும் வழங்கி, மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடியில் மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், 300 பெண்களுக்கு விலையில்லா சேலைகள் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் ஊராட்சிக் கழகம் சார்பில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மாண்புமிகு அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதைசெலுத்தப்பட்டது. கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவ முகாமும் நடைபெற்றது.

மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் பிறந்தநாள் அன்று, காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் பரிசுப் பெட்டகம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியக் கழகம் சார்பில், அனந்தல் பேருந்து நிலையம் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாண்புமிகு அம்மாவின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது. பின்னர், ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி, மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை கழகத்தினர் சிறப்பாகக் கொண்டாடினர்.

நெல்லை புறநகர் மாவட்டக் கழகம் சார்பில், மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாள் அன்று, நான்குனேரி அரசு மருத்துவமனையில் பிறந்த 3 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. வள்ளியூர் ஒன்றியக் கழகம் சார்பில், 500 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பாளையங்கோட்டையில் உள்ள பிஷப் சார்ஜன்ட் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியருக்கு சீருடைகள் மற்றும் உணவு வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட கழக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மாண்புமிகு அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, கிருஷ்ணகிரி தலைமை அரசு மருத்துவமனையில் பிறந்த 11 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

பர்கூர் சட்டமன்றத் தொகுதி கழகம் சார்பில், பர்கூர் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், மறைந்த அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவியும் கழகத்தினர் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை கழகத்தினர் சிறப்பாகக் கொண்டாடினர்.

ஓசூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 6 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. மேலும், நோயாளிகளுக்கு பால், ரொட்டி உள்ளிட்டவையும் வழங்கப்பட்டன. இலவச சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், கூடலூரில் நகரக் கழகம் சார்பில், மறைந்த மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு, மனநலம் பாதிக்கப்பட்டோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

உதகையில் ஏழை-எளியோர் பயன்பெறும் வகையில், சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

தொடர்ந்து, கோத்தகிரி டானிங்டன் எம்.ஜி.ஆர். சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மாண்புமிகு அம்மாவின் திருவுருவப்படத்திற்கு, மாவட்ட கழகம் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மதுரை மாவட்ட ஆவின் அண்ணா தொழிற்சங்கம் சார்பில், மாண்புமிகு அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.

ஈரோடு புறநகர் மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில், பெருந்துறை நான்கு ரோடு சந்திப்பில், மாண்புமிகு அம்மாவின் திருவுருப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், பெருந்துறை சோழிஸ்வர் கோயிலில், 4 ஆயிரத்து 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சிலேட்டர்புரத்தில் அமைந்துள்ள அபக்ஸ் காது கேளாதோர் பள்ளி மாணவ-மாணவியருக்கு, இனிப்புகளுடன், அன்னதானமும் வழங்கப்பட்டது. முன்னதாக, மாண்புமிகு அம்மாவிற்காக மாணவ-மாணவியர் பிரார்த்தனை செய்தனர்.

மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் ஒன்றியக் கழகம் சார்பில், கருங்கல் அருகே ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அகஸ்டீஸ்வரம் ஒன்றியக் கழகம் சார்பில், மைலாடி சந்திப்பில் 669 பேருக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஒன்றியக் கழகம் சார்பில், அரசு பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியருக்கு அறுசுவை விருந்து வழங்கி, மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பாகக் கொண்டாடினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00