புரட்சித் தலைவி அம்மா பிறந்த நாளையொட்டி, தமிழக அரசின் சார்பில் மாநிலம் முழுவதும் 690 மருத்துவ முகாம்கள் : கட்டணமில்லாமல் மருத்துவ சோதனை - மருத்துவ ஆலோசனைகள் - மருந்துகள்
Feb 24 2017 4:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புரட்சித் தலைவி அம்மா பிறந்த நாளையொட்டி, தமிழக அரசின் சார்பில், மாநிலம் முழுவதும் 690 மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதில், கட்டணமில்லாமல் மருத்துவ சோதனை நடைபெற்று மருத்துவ ஆலோசனைகள் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சென்னை வண்ணாரப்பேட்டையில், புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாமினை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். முதலமைச்சர் அம்மா அறிமுகப்படுத்தி விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவமனைகளில் இந்த முகாம்கள் வரும் 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளன.
நிதியமைச்சர் திரு. D.ஜெயகுமார், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், வடசென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. பாலகங்கா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனிடையே, சென்னை ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனையில் வடசென்னை தெற்கு மாவட்டக் கழகம் சார்பில், இன்று பிறந்த 11 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
சென்னை அரசு பொது மருத்துவமனையில், வடசென்னை தெற்கு மாவட்டக் கழகம் சார்பில் தொடர் அன்னதான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வரும் ஏழை எளிய மக்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் திரு. டி.ஜெயகுமார், டாக்டர் சி.விஜயபாஸ்கர், வடசென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. பாலகங்கா மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.