திருச்சியில் 3 செங்கல் மீது பத்மாசனத்தில் 30 நிமிடங்கள் அமர்ந்தவாறு 7 வயது சிறுமி புதிய சாதனை
Nov 9 2016 10:01AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில், 3 செங்கல் மீது பத்மாசனத்தில் 30 நிமிடங்கள் அமர்ந்தவாறு 7 வயது சிறுமி புதிய சாதனைப்படைத்துள்ளார்.
திருச்சியைச் சேர்ந்த சக்திகாவ்யா என்ற 7 வயது சிறுமி, 2ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது பெற்றோருடன் இணைந்து யோகாசனப் பயிற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், 3 செங்கல் மீது பத்மாசனத்தில் 30 நிமிடம் அமர்ந்தவாறு புதிய சாதனையினை ரெக்கார்ட்ஸ் குழுவினர் முன்னிலையில் நிகழ்த்திக் காட்டினார். இந்த சாதனை நிகழ்வானது பதஞ்சலி புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற உள்ளது. 5 மாத தொடர் பயிற்சிக்குப் பிறகு சக்திகாவ்யா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.