தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறார்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்
Sep 29 2016 12:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆண்டிபட்டியை அடுத்துள்ள பந்துவார்பட்டியை சேர்ந்த திரு.சேகர் என்பவரின் மகன் கோபிநாத், மகள் கோபிகா ஆகியோர், தங்கள் பாட்டியுடன் அருகில் உள்ள கல்குவாரி குட்டையில் குளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது திடீரென இரு சிறார்களும் நீரில் மூழ்கினர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாட்டி கூக்குரலிட, அதனைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவப் பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், பொதுமக்களின் உதவியுடன் ஒரு மணிநேரம் போராடி இரு சிறார்களின் உடல்களையும் மீட்டனர். பின்னர், அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறார்கள் பலியான சம்பவத்தால், அப்பகுதியே சோகத்தில் மூழ்கியது.