கன்னியாகுமரி மாவட்டத்தில் கொசு ஒழிப்புப் பணியில் 600-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக, பொது சுகாதாரத்துறை தகவல்
Aug 27 2016 8:12AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொது சுகாதாரத்துறை சார்பில், டெங்கு தடுப்பு குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில், பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் மதுசூதனன், மாவட்ட ஆட்சியர் திரு.சஜ்ஜன் சிங் சவான், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். வீடு வீடாகச் சென்று கொசு ஒழிப்புப் பணிகளில் 600-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். டெங்கு நோய் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், அரசு மருத்துவமனைகள் மூலம் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார். மாவட்டம் முழுவதும் 148 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.