வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவையொட்டி தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்து சேவை தொடக்கம்
Aug 25 2016 1:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவையொட்டி தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து கழகம் சார்பில், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலிருந்தும் சிறப்பு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா இன்று விமரிசையாக தொடங்கியுள்ளது. திருவிழாவில் பங்கேற்பதற்காக, தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்த வண்ணம் உள்ளனர். பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துக் கழகம் இன்று முதல் மாநிலத்தின் முக்கிய நகரங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது. அடுத்த மாதம் 10-ம் தேதி வரை, சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோவை, திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சிறப்புப் பேருந்துகளுக்கு முன்பதிவு செய்யவும், வழிவகை செய்யப்பட்டுள்ளது.