நாகை மாவட்டத்தில் அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற டிராக்டர் ஓட்டுனர்கள் 3 பேர் கைது
Aug 25 2016 1:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற டிராக்டர் ஓட்டுனர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை அருகே குத்தாலம் பகுதியில், இரவு நேரத்தில் மண் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், குத்தாலம் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், அதிகாலையில் குத்தாலத்தை நோக்கி வந்த 3 டிராக்டர்களை மடக்கிப்பிடித்து போலீசார் சோதனை செய்ததில், அதில் அரசு அனுமதியின்றி மணல் கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது. உடனடியாக டிராக்டர் ஓட்டுனர்கள், முத்தமிழ்செல்வன், ரமேஷ், கலையரசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில், பாண்டூரைச் சேர்ந்த முகம்மது அலி ஜின்னா என்பவரது திடலில் அவர்கள் அனுமதியின்றி மண் எடுத்தது தெரியவந்ததது. இதுகுறித்து குத்தாலம் வருவாய்த் துறையினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.