தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க. வரம்பு மீறி செயல்படுவதாக தமிழக பாரதிய ஜனதா குற்றச்சாட்டு - பேரவை நேரத்தை பயன்படுத்தாமல் வீணடிப்பதாகவும் புகார்
Aug 25 2016 10:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சட்டமன்றத்தில் தி.மு.க. வரம்பு மீறி செயல்படுவதாக தமிழக பாரதிய ஜனதா தலைவர் திருமதி. தமிழிசை செளந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டப்பேரவையில் தி.மு.க. உறுப்பினர்கள் நடந்துகொள்ளும் விதம் கண்டனத்திற்குரியது என தெரிவித்தார். சட்டப்பேரவையில் பேசுவதற்கு நேரம் கிடைத்தும், அதை தி.மு.க. உறுப்பினர்கள் பயன்படுத்தி கொள்ளாமல் வீணடிப்பதாக குற்றம்சாட்டிய திருமதி. தமிழிசை செளந்தரராஜன், ஸ்டாலின், வழிநடத்தும் தலைவராக இல்லாமல், வெளிநடத்தும் தலைவராக இருப்பதாகவும் தெரிவித்தார்.