மத்திய மேற்கு வங்கக்கடலில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு - வடதமிழகம், புதுச்சேரியில் மழைபெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல்
Aug 25 2016 10:19AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய மேற்கு வங்கக்கடலில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதனால் அடுத்த 2 நாட்களுக்கு வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைபெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு காற்று சுழற்சி நிலவுகிறது. அதேபகுதியில் அடுத்த 24 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, அடுத்த 2 நாட்களில் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே கடந்த சில நாட்களாக சுட்டெரித்து வந்த வெயில் மறைந்து, குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதாலும், அவ்வப்போது லேசான மழை பெய்து வருவதாலும் சென்னை நகர மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் விழுப்புரம் மாவட்டம் வானூரில் 6 சென்டி மீட்டரும், புதுச்சேரியில் 5 சென்டி மீட்டரும், மயிலம், விருதுநகர், செஞ்சி ஆகிய இடங்களில் தலா 3 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.