சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத புங்கை மர எண்ணெயிலிருந்து டீசல் எஞ்சினை இயக்கி நாகையைச் சேர்ந்த விவசாயி சாதனை
Sep 2 2016 12:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகையைச் சேர்ந்த விவசாயி ஒருவர், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத புங்கை மர எண்ணெயிலிருந்து டீசல் எஞ்சினை இயக்கியுள்ளார்.
நாகை மாவட்டத்தில் சாலையோரங்களில் அதிக அளவில் நிழலுக்காக புங்கை மரங்கள் நடப்பட்டுள்ளன. நல்ல நிழலை கொடுக்கும் இந்த மரத்திலிருந்து மக்கள் மற்றொரு பயனையும் பெற முடியும் என்பது இப்போது தெரியவந்துள்ளது. வேட்டைக்காரனிருப்பைச் சேர்ந்த விவசாயி ஒருவர் புங்கை விதைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெய் மூலம் மோட்டார் எஞ்சினை இயக்கியுள்ளார். விவசாய பணிக்காக டீசல் எஞ்சின் மூலம் நிலத்தடி நீரை இறைத்துவரும் இவர், டீசலுக்கு பதிலாக புங்கன் மரங்களிலிருந்து பெறப்படும் விதைகளிலிருந்து எண்ணெய் தயாரித்து, டீசல் எஞ்சினை இயக்குவதன் மூலம் எரிபொருள் செலவு வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவித்தார்.