முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நாகையில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் ஏராளமானோர் பங்கேற்று பயனடைந்தனர்
Jul 30 2016 2:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நாகையில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் ஏராளமானோர் பங்கேற்று பயனடைந்தனர்.
நாகை மாவட்டம் மஞ்சக்கொல்லையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட ஏழை - எளிய மக்களுக்கு இரத்த அழுத்தம், இரத்த பரிசோதனை, இசிஜி, கண், எலும்பு, குழந்தைகள் நலன் பேனுதல் உள்ளிட்டவற்றுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அமைச்சர் திரு. ஓ.எஸ். மணியன் உட்பட சட்டமன்ற உறுப்பினர், கழக நிர்வாகிகள், மருத்துவர்கள் ஏராளமானோர் முகாமில் கலந்து கொண்டனர்.
இதனிடையே, திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. விவசாயிகள் கொண்டு வரும் கால்நடைகளுக்கு, சுண்டுவாத அறுவை சிகிச்சை, தடுப்பூசி, செயற்கைமுறை கருவூட்டல்கள், கன்றுகள், செம்மறி மற்றும் வெள்ளாடுகளுக்கு குடற்புழு நீக்கம் உள்ளிட்ட அனைத்து விதமான பரிசோதனைகள் செய்யப்பட்டன. அமைச்சர் சேவூர் திரு. எஸ். ராமசந்திரன் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.