கும்பகோணம் அருகே மினி பேருந்து கவிழ்ந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல்
Jul 30 2016 1:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கும்பகோணம் அருகே மினி பேருந்து கவிழ்ந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு கும்பகோணம் அருகே மினி பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த பலர் படுகாயமடைந்தனர். அவர்களில், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் திரு. துரைக்கண்ணு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடமும் கேட்டறிந்தார். இந்த நிகழ்வின் போது கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.