பெரும்பள்ளம் தடுப்பணை சுவர் மீது ஏறிநின்று வேடிக்கை பார்க்கும்போது தண்ணீரில் தவறி விழுந்து உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதாஆழ்ந்த இரங்கல் : உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் உத்தரவு

Jul 31 2016 8:12AM
எழுத்தின் அளவு: அ + அ -

பெரும்பள்ளம் தடுப்பணை சுவர் மீது ஏறிநின்று வேடிக்கை பார்க்கும்போது தண்ணீரில் தவறி விழுந்து உயிரிழந்த திரு. சீனிவாசன், தற்கொலை செய்துகொள்ளவில்லை என்பது மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். உயிரிழந்த திரு. சீனிவாசனின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, அன்னாரின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலாறு, கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்தில் உற்பத்தியாகி, ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டம் வழியாக, தமிழ்நாட்டிலுள்ள வேலூர் மாவட்டத்தில் நுழைந்து, திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் வழியாக 222 கிலோ மீட்டர் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

1892-ஆம் ஆண்டைய மதராஸ்-மைசூர் ஒப்பந்தப்படி, பாலாறு ஒரு பன்மாநில நதி என்பதால், தமிழ்நாட்டின் முன் அனுமதி இல்லாமல் எந்த அணைக் கட்டுமானத்தையோ, அல்லது நீரைத் தடுப்பதற்கான கட்டுமானத்தையோ அல்லது நீரைத் திருப்புவதற்கும், நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்த ஒரு செயலையும் ஆந்திர அரசுமேற்கொள்ள முடியாது -

2006-ஆம் ஆண்டு ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம், குப்பம் தாலுக்காவில் உள்ள கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே ஒரு அணையினை ஆந்திரப் பிரதேச அரசு கட்ட எத்தனித்த போது, அதனை தடுத்து நிறுத்த உச்சநீதிமன்றத்தில் தமது தலைமையிலான அரசு ஒரு வழக்கினை தாக்கல் செய்து, அது இன்னமும் நிலுவையில் உள்ளது -

தற்போது பாலாற்றின் குறுக்கே சித்தூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பள்ளம் என்னும் இடத்தில், ஆந்திரா-தமிழ்நாடு எல்லைக்கருகே அமைந்துள்ள தடுப்பணையின் உயரத்தை 9 அடியிலிருந்து 12 அடியாக ஆந்திர அரசு உயர்த்தியுள்ளது -

இது பற்றி தெரிய வந்தவுடன், கடந்த ஒன்றாம் தேதி, ஆந்திர மாநில முதலமைச்சருக்கு இது குறித்து கடிதம் ஒன்றை தாம் எழுதியதாகவும், அந்தக் கடிதத்தில் உயர்த்தப்பட்ட தடுப்பணையின் உயரத்தை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வர வேண்டும் என்றும், இயற்கையாக தமிழ்நாட்டிற்கு வந்தடைய வேண்டிய பாலாறு நீரை எவ்வகையிலும் தடுத்திடக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதே போன்று, கடந்த இரண்டு மாதங்களில், கங்கனஉறள்ளி, சித்தாவூர் மற்றும் கங்குந்தி ஆகிய இடங்களில் உயர்த்தப்பட்ட தடுப்பணைகளின் உயரத்தை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வர வேண்டும் எனவும் ஆந்திரப் பிரதேச அரசு கேட்டுக் கொள்ளப்பட்டது -மத்திய அரசும்இந்தப் பிரச்சனையில் தலையிட்டு, உரிய அறிவுரைகளை ஆந்திர அரசுக்கு வழங்கக் கேட்டுக் கொள்ளப்பட்டது-

ஆந்திரப் பிரதேச அரசு மற்றும் மத்திய அரசு இது பற்றி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத சூழ்நிலையில், தமது உத்தரவின் பேரில், கடந்த 18-ம் தேதி, உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவினை தமிழக அரசு தாக்கல் செய்தது - தமிழ்நாட்டின் இசைவுப் பெறாமல் ஆந்திரப் பிரதேச அரசு பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைகளின் உயரத்தினை உயர்த்தியது தமிழ்நாடு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என அறிவிக்க வேண்டும்; பெரும்பள்ளம், கங்கனஉறள்ளி, சித்தாவூர் மற்றும் கங்குந்தி ஆகிய இடங்களில் உயர்த்தப்பட்ட தடுப்பணைகளை முன்பிருந்த நிலைக்கே கொண்டு வர வேண்டும் என உறுத்துக்கட்டளை பிறப்பிக்க வேண்டும்; ஆந்திரப் பிரதேச அரசு இவ்வாறு செய்வதற்கு நிரந்தர உறுத்துக்கட்டளை பிறப்பிக்கப்பட வேண்டும்; பாலாறு மற்றும் அதன் கிளை ஆறுகளில் இயற்கையாக ஓடுகின்ற நீரை தமிழ்நாட்டிற்கு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என ஆந்திரப் பிரதேச அரசுக்கு நிரந்தர உறுத்துக்கட்டளை பிறப்பிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த வழக்கில் வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இந்தச் சூழ்நிலையில், வாணியம்பாடி வட்டம், புல்லூர் மதுரா கீழ்பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திரு.சின்னக்கண்ணு என்பவரின் மகன் திரு.சீனிவாசன் நேற்று மாலை பெரும்பள்ளம் தடுப்பணையின் மீது நின்று கொண்டு தடுப்பணையில் நிரம்பி இருந்த தண்ணீரைப் பார்த்து வேதனைப்பட்டு ஆந்திரப் பிரதேச அரசு தடுப்பணையைக் கட்டியதால், தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீர் தடுக்கப்பட்டு விட்டதே என்ற விரக்தியில், உணர்ச்சிவயப்பட்டு, தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன -

எனினும், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையினரின் விசாரணையில் திரு.சீனிவாசன் பெரும்பள்ளம் தடுப்பணை சுவர் மீது நின்று வேடிக்கைப் பார்க்கும் போது, தண்ணீரில் தவறி விழுந்து இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் -இறந்த திரு.சீனிவாசனின் குடும்பத்திற்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னாரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் வழங்க தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.



முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, சீனிவாசனின் குடும்பத்தினர் நன்றி

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பெரும்பள்ளத்தில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை மீது நின்றபோது தண்ணீரில் தவறி விழுந்து உயிரிழந்த கீழ்பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திரு.சீனிவாசனின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, திரு.சீனிவாசனின் குடும்பத்தினர் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00