முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுக்கிணங்க பெரம்பலூர் நகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்த ஜெர்மன் நாட்டு அதிகாரிகள், முதலமைச்சருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர்
Jul 30 2016 1:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுக்கிணங்க பெரம்பலூர் நகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்த ஜெர்மன் நாட்டு அதிகாரிகள், முதலமைச்சருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.
பெரம்பலூர் நகராட்சியில் சுமார் 32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு, மக்களுக்காகபயன்பாட்டில் உள்ள பாதாள சாக்கடை திட்ட பணிகளை, ஜெர்மன் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். இந்த திட்டம் எந்த வகையில் பயனுள்ளதாக உள்ளது என்று பொதுமக்களிடம் அவர்கள்கேட்டறிந்தனர். பாதாள சாக்கடைத் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதால், தமிழக அரசுக்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் பாராட்டு தெரிவித்தனர். மேலும், மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்டு, இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திவரும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு ஜெர்மன் அதிகாரிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.