நாகையில், பிச்சையெடுத்த சிறுவர் மற்றும் சிறுமியர் மீட்கப்பட்டு பள்ளியில் கல்வி கற்க அனுப்பி வைக்கப்பட்டனர்
Jul 27 2016 8:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் சிறுவர் மற்றும் சிறுமியர் சிலர் பிச்சையெடுத்துக் கொண்டிருந்ததை கண்ட கல்வித்துறை அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் கொள்ளிடம் அருகே மணலகரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் படித்து வந்ததும் தெரியவந்தது. சிறுவர், சிறுமியரின் பெற்றோர், பள்ளிக்கு அனுப்பாமல் பிச்சையெடுக்க வைத்ததும் தெரியவந்ததையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டதோடு, பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.