தென்மேற்கு பருவமழையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் விதத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது
May 27 2016 11:26AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் தென்மேற்கு பருவமழையையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 180 கிராமங்கள் கடலோர பகுதியில் அமைந்துள்ள நிலையில், மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் 22 சதவீதம் பேர் கடல்சார் தொழிலையே நம்பியுள்ளனர். இதனால், இயற்கை இடர்பாடுகளால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.