கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தின் சார்பில் நடத்தப்பட்ட இலவச யோகா பயிற்சியில் ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
May 25 2016 12:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தின் சார்பில் நடத்தப்பட்ட இலவச யோகா பயிற்சியில் ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரியில், அரசு அருங்காட்சியகத்தில், கோடை விடுமுறையையொட்டி பள்ளி மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் நடத்தப்பட்ட யோகா பயிற்சியில் 14 வயதுக்குட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மாணவர்களின் ஆரோக்கியமான வாழ்விற்கும், படிப்பில் ஞாபக சக்தி அதிகரிக்கவும், இந்த யோகா பயிற்சிகள் பயனுள்ளதாக இருக்கும் என இப்பயிற்சியில் பங்கேற்ற யோகா ஆசிரியர் தெரிவித்தார். இந்த 3 நாள் கோடைகால சிறப்பு பயிற்சியில் பங்கேற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் அரசு அருங்காட்சியகம் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.