ராமநாதபுரத்தில், பேருந்தில் கடத்தப்பட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடல் குதிரைகளை போலீசார் பறிமுதல் - ஒருவர் கைது
May 25 2016 12:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரத்தில், பேருந்தில் கடத்தப்பட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடல் குதிரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மன்னார் வளைகுடா பகுதியில் உலகின் அரியவகை கடல்வாழ் உயிரினங்களான கடல்குதிரை, கடல் அட்டை உள்ளிட்ட சிலவகை கடல்வாழ் உயிரினங்களை பிடிக்க மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேருந்து நிலையத்தில், பேருந்துக்காக காத்திருந்த சுரேஷ் என்பவரை போலீசார் சோதனை செய்ததில், அவரிடமிருந்து, 26 கிலோ கடல்குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த கடல் குதிரைகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட கடல்குதிரைகளின் மதிப்பு 10 லட்சம் ரூபாய் இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.