பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விபத்தில் கால் முறிந்த நிலையில், அவருக்கு தசைநார் பொருத்தி சென்னை மருத்துவர்கள் சாதனை
May 25 2016 10:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விபத்தில் கால் முறிந்த நிலையில், அவருக்கு தசைநார் பொருத்தி சென்னை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
பெங்களூருவைச் சேர்ந்த 28 வயது இளைஞருக்கு விபத்தில் கால் முறிந்தது. சாதாரண சிகிச்சையில் அவரது கால் குணமடையாததால், மிகவும் சிரமப்பட்டார். இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞருக்கு பல்வேறு கட்டங்களாக அறுவை சிகிச்சை செய்தனர். முதலில், பாதிக்கப்பட்டவரின் தாயாரது தசைநார் எடுத்து பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையில் முழுமையான பயன் கிடைக்காததால், இறந்த ஒருவரின் தசைநாரை எடுத்து பதப்படுத்தப்பட்டு பொருத்தப்பட்டது. இதில், அந்த இளைஞர் பூரண குணமடைந்தார்.