தமிழகத்தில் 6-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தாம் அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றும் வகையில், 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் : தமிழகம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி
May 25 2016 6:57AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் 6-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றுள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தாம் அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றும் வகையில், 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். இதற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன. விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி, டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைப்பு, மணப்பெண்ணின் திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கம், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்றப்பட்டதற்கு பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.