முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தனியார் மருத்துவமனையில் மூட்டுமாற்று அறுவை சிகிக்கை செய்துகொண்ட பெண் - குடும்பத்தினர், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி
May 2 2016 10:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் ஏழை, எளிய மக்களும் அதிநவீன உயர் சிகிச்சையை பெற முடியும் என்ற நிலையை உருவாக்கியிருப்பவர் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சென்னையை அடுத்த பம்மல் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு மூட்டுமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு, தற்போது அவர் பூரண உடல்நலத்துடன் உள்ளார். இதற்காக முதலமைச்சருக்கு, அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண், நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏழை-எளிய மக்களும் உயர் சிகிச்சை பெறும் வகையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காப்பீட்டு அட்டை வைத்திருப்போர் 4 லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சை பெறும் வகையில், விதிமுறைகளை மாற்றியமைத்து, சாதாரண மற்றும் நடுத்தர மக்களும் பயனடைய செய்திருப்பவர் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா. அந்த வகையில், சென்னையை அடுத்த பம்மல் பகுதியைச் சேர்ந்த திருமதி. குணசுந்தரிக்கு தனியார் மருத்துவமனையில் மூட்டுமாட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
ஏழை குடும்பத்தைச் சேர்ந்த அந்த பெண், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். பல லட்சம் ரூபாய் செலவிலான இந்த அறுவை சிகிச்சையை, கட்டணம் ஏதுமின்றி இலவசமாக செய்வதற்கு வழிவகை செய்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணும், அவரது குடும்பத்தினரும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.