முதலமைச்சர் ஜெயலலிதாவை, I.N.T.U.C. தொழிற்சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகளும், தமிழ்நாடு ராஜஸ்தானி சங்க நிர்வாகிகளும் நேரில் சந்தித்து, சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க-வுக்கு ஆதரவை தெரிவித்தனர்
May 1 2016 3:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, I.N.T.U.C. தொழிற்சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகளும், தமிழ்நாடு ராஜஸ்தானி சங்க நிர்வாகிகளும் நேரில் சந்தித்து, சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க-வுக்கு ஆதரவை தெரிவித்தனர்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைப் பொதுத்தேர்தல், வரும் 16ம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி. ஜெ. ஜெயலலிதாவை, I.N.T.U.C. தொழிற்சங்கத்தின் தலைவர் திரு. G. காளன் தலைமையில், மூத்த துணைத் தலைவர் திரு. K.S. கோவிந்தராஜன், பொதுச்செயலாளர் திரு. R. ஆதிகேசவன், மூத்த துணைத் தலைவர் திரு. M. பன்னீர்செல்வம், பொருளாளர் திரு. N. தேவராஜன் மற்றும் இளைஞரணி பொதுச் செயலாளர் திரு. P. கோபிநாத் ஆகியோர் இன்று, நேரில் சந்தித்து, அ.இ.அ.தி.மு.க.வுக்கு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைப் பொதுத் தேர்தலில் தங்களுடைய தொழிற்சங்கத்தின் ஆதரவைத் தெரிவித்தனர்.
இதேபோன்று தமிழ்நாடு ராஜஸ்தானி சங்கத்தின் துணைத் தலைவர் திரு.சிவ்குமார் கோயங்கா, மூத்த தலைவர் கைலாஷ்மல் தூகர், பொதுச் செயலாளர் மோகன்லால் பஜாஜ், பொருளாளர் திரு.பி.ராஜேந்திர குமார், தலைவர் திரு.ராஜேந்திரகுமார், இணைச் செயலாளர் திரு.ராம்அவதார் ருண்டா ஆகியோர் முதலமைச்சரை நேரில் சந்தித்து தங்களுடைய சங்கத்தின் ஆதரவை தெரிவித்தனர். இவர்களுக்கு கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா தமது நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார்.
இதனிடையே, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடர்பாளர், பேராசிரியர் நிர்மலா அருள் பிரகாஷ் நேரில் சந்தித்து, தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.