தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஈரோடு, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டுள்ளன
Feb 7 2016 2:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக, சேலம், நீலகிரி, கரூர், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்கெனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பீகார் மாநிலம் பத்சார், பைகுசாராஸ் மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 2 லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்ட 2 ஆயிரத்து 300 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 2 ஆயிரத்து 137 வாக்குப்பதிவு இயந்திரங்களும், பூதபாண்டியில் உள்ள தோவாளை தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதனை மாவட்ட ஆட்சியர் திரு. சஜ்ஜன்சிங் சவான் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதேபோல், ஈரோடு மாவட்டத்திற்கான 2 ஆயிரத்து 850 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மஹாராஷ்டிர மாநிலத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டுள்ளன. ஈரோடு காமராஜர் பள்ளியில் வைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் திரு. எஸ். பிரபாகர் நேரில் சென்று பார்வையிட்டார்.