முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது என தேனி, மதுரை மாவட்டங்களில் நடைபெற்ற அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றம்
Feb 5 2016 7:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாளை சிறப்பு வழிபாடு மற்றும் ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது என தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேனி மாவட்டம் அ.இ.அ.தி.மு.க. அலுவலகத்தில் கழக இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளை முதியவர்களுக்கு வேட்டி-சேலை, மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கியும், ரத்ததான முகாம்கள் நடத்தியும், மும்மதப் பிரார்த்தனை செய்தும் கொண்டாட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
மதுரை புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து கழக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மேயர் திரு. ராஜன்செல்லப்பா தலைமையில் நடைபெற்றது. இதில், முதலமைச்சரின் பிறந்தநாளை மும்மதப் பிரார்த்தனை மேற்கொண்டும், ரத்ததான முகாம், அன்னதானம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தியும், ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதேபோல், புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாளை, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் சிறப்பு பிரார்த்தனை செய்தும், ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடுவது என்றும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி கழகம் வெற்றிபெற பாடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.