பருவமழை தொடர்பான பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் - உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் வீதம் 16 லட்சம் ரூபாய் நிதியுதவியை உடனடியாக வழங்க உத்தரவு

Dec 1 2015 10:20AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருநெல்வேலி, சென்னை ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடர்பான பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் வீதம் 16 லட்சம் ரூபாய் நிதியுதவியை உடனடியாக வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக கடந்த 28ம் தேதி, திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான், உதயனேரி கிராமத்தைச் சேர்ந்த திரு. சங்கரபாண்டி மகன் ஆறுமுக காந்தி தனது வயலுக்குச் சென்ற போது, வெள்ளப் பெருக்கின் காரணமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்டம், மாம்பலம் வட்டம், கே.கே நகரைச் சேர்ந்த, திரு. தங்கராஜ் மகன் ஆறுமுகம் மற்றும் வடபழனி வட்டம், சோமசுந்தரபாரதி நகரைச் சேர்ந்த திரு. மூர்த்தி மகன் கார்த்திக் ஆகியோர் வெள்ளப் பெருக்கின் காரணமாக ஆற்றுப்பாலத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர் என்ற செய்தியையும்; மயிலாப்பூர் வட்டம், ராஜாஅண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகரைச் சேர்ந்த திரு. சுப்பையா மகன் பாபு மழை நீர் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து தாம் மிகவும் துயரம் அடைந்ததாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில், பல்வேறு மாவட்டங்களில் பெய்த கன மழையின் காரணமாக பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த இந்த நான்கு பேரின் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், இந்தத் துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா நான்கு லட்சம் ரூபாய் நிதியுதவி உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00