தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெள்ளத்தால் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் : தலா ரூ.4 லட்சம் வீதம், ரூ.36 லட்சம் நிதியுதவியை உடனடியாக வழங்கவும் முதலமைச்சர் உத்தரவு

Nov 24 2015 6:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியும், வீட்டின் சுவர் இடிந்து விழுந்தும், இடி-மின்னல் தாக்கியும் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 36 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக, கடந்த 12-ம் தேதி, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஆட்டந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த திரு. வரதன் என்பவரின் மகன் சின்னசாமி;

பழவேற்காடு கிராமத்தைச் சேர்ந்த திரு. பூபாலன் என்பவரின் மகன் சேத்தப்பன்;

கடந்த 16-ம் தேதி, அம்பத்தூர் வட்டம், திருமுல்லைவாயல் கிராமத்தைச் சேர்ந்த திரு. நடராஜன் என்பவரின் மகன் மணிமாறன்;

கடந்த 17-ம் தேதி, திருத்தணி வட்டம், சிறுகுமி கிராமத்தைச் சேர்ந்த திரு. ஜெயக்குமார் என்பவரின் மகன் தர்ஷன்;

கடந்த 18-ம் தேதி, அம்பத்தூரைச் சேர்ந்த திரு. சிவக்குமார் என்பவரின் மகன் ஹரீஷ்குமார்;

பொன்னேரி வட்டம், வெள்ளிவயல் கிராமத்தைச் சேர்ந்த திரு. முத்துராமன் என்பவரின் மகன் தணிகாசலம் ஆகியோர் வெள்ளப் பெருக்கின் காரணமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகவும் துயரம் அடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த 16-ம் தேதி, திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் வட்டம், கதிர்வேடு கிராமத்தைச் சேர்ந்த திரு. பாலசுந்தர் என்பவரின் மகன் கோவிந்தராஜ், மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டத்தைச் சேர்ந்த திரு. வேடியப்பன் என்பவரின் மகன் சிவா என்கிற சிவன், கடந்த 16-ம் தேதி, திருவள்ளூரில் மழை வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

கடந்த 20-ம் தேதி, திண்டுக்கல் மாவட்டம், ஏ. வெள்ளோடு கிராமத்தைச் சேர்ந்த திரு. ஜெயபால் என்பவரின் மகன் சுந்தரராஜ், இடி, மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து தாம் மிகவும் துயரம் அடைந்ததாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் சமீபத்தில் பெய்த கன மழையின் காரணமாக, பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த இந்த 9 நபர்களின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய், பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00