நிமிடத்திற்கு 15 கண்ணாடி டம்ளர்களை சுத்தம் செய்யும் வாஷிங்மிஷினை நெல்லையில் பொறியியல் பட்டறை நடத்தி வருபவர் கண்டுபிடிப்பு
Oct 5 2015 11:57AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லையில் பொறியியல் பட்டறை நடத்தி வரும் ஒருவர், நிமிடத்திற்கு 15 கண்ணாடி டம்ளர்களை சுத்தம் செய்யும் வாஷிங்மிஷினை கண்டுபிடித்துள்ளார்.
பாளையங்கோட்டை வண்ணார்பேட்டையைச்சேர்ந்த சிவபாலன் என்பவர், ஸ்ரீபுரத்தில் பொறியியல் பட்டறை நடத்தி வருகிறார். இவர் கண்ணாடி டம்ளர்களை கழுவி சுத்தம் செய்ய வாஷிங்மிஷின் ஒன்றை தயாரித்துள்ளார். இதில், ஒரு நிமிடத்தில் 15 கண்ணாடி டம்ளர்கள் சுத்தம் செய்யப்படுகிறது. மேலும், சுகாதாரமான முறையில் பாத்திரங்களை சுத்தம் செய்யவும் இந்த சாதனம் பயன்படுகிறது. இந்த சாதனத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சிவபாலன் ஏற்கனவே ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க செயற்கை கை கருவியை உருவாக்கியுள்ளார். மேலும், ஆழ்துளையில் உள்ள நச்சுவாயுவை வெளியேற்றவும், ஆக்ஸிஜன் கிடைக்கவும் வழிமுறைகளை கண்டறிந்துள்ளார்.