மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு - முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி

Aug 31 2015 7:49AM
எழுத்தின் அளவு: அ + அ -

விவசாயகளின் தேவையை கருத்தில் கொண்டு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

சுமார் 12 லட்சம் ஏக்கர் பரப்பளவில் காவேரி டெல்டா மாவட்ட விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக, பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த 9-ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். மேலும், தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக மகசூலைப் பெற வேண்டும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன்படி, மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு தற்போது விவசாயிகள் வேளாண் பணியில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்ட்டுள்ளது. இதன்படி, மேட்டூர் அணையிலிருந்து 13 ஆயிரம் கனஅடியிலிருந்து கூடுதலாக 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தற்போது 16 ஆயிரம் கனஅடியாக திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 92.46 அடியாக உள்ளது. கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள், தங்கள் தேவை அறிந்து நடவடிக்கை எடுத்துள்ள முதமைச்சர் செல்வி ஜெயலலிதாவிற்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00