பி.எட். விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 3-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை வழங்கப்படும் : தமிழ்நாடு கல்வியியல் கல்லூரி அறிவிப்பு
Aug 28 2015 9:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பி.எட். விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 3-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை வழங்கப்படும் என தமிழ்நாடு கல்வியியல் கல்லூரி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 தனியார் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் அடுத்த மாதம் 3-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை வழங்கப்படும் என தமிழ்நாடு கல்வியியல் கல்லூரி அறிவித்துள்ளது. இதற்காக 8 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாகவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றபின், தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு அடுத்த மாத இறுதியில் நடைபெறும் என்றும் தமிழ்நாடு கல்வியியல் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.