சேலம் மாவட்டத்தில் 5 புள்ளி மான்கள் மர்மமான முறையில் உயிரிழந்து தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரனை
Aug 28 2015 6:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 5 புள்ளி மான்கள் மர்மமான முறையில் உயிரிழந்து தொடர்பாக, வனத்துறையினர் தீவிர விசாரனை மேற்கொண்டுள்ளனர்.
தலைவாசல் ஒன்றியத்துக்குட்பட்ட, ஆராத்தி அக்ராஹாரம் கிராமத்தில் உள்ள ஏரியில், 5 புள்ளி மான்கள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக, வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து,அங்கு சென்ற வனத்துறையினர், மான்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த வனத்துறையினர், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் யாராவது மருந்து வைத்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.