ஆளுநர் முனைவர் ரோசய்யாவின் பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் ஜெயலலிதா தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து : மலர்கொத்து அனுப்பி வாழ்த்துக் கடிதம் - முதலமைச்சருக்கு, ஆளுநர் நன்றி
Jul 4 2015 10:03AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, இன்று 82-வது பிறந்த நாள் காணும் ஆளுநர் முனைவர் கே. ரோசய்யாவுக்கு மலர்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார். மேலும், ஆளுநரை முதலமைச்சர் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு, பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து, தமது மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டார்.
முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, இன்று ஆளுநர் முனைவர் கே. ரோசய்யாவின் 82-வது பிறந்தநாளையொட்டி, மலர்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். 82-வது பிறந்த நாள் காணும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில், தங்களுக்கு உளம்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைவதாகவும், நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் சேவை செய்ய நல்ல உடல்நிலையும், மன அமைதியும் பெற்று தாங்கள் பல்லாண்டுகள் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் ஆளுநருக்கு அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, இன்று தமிழக ஆளுநரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து, தமது மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டார். அப்போது, தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு ஆளுநர் முனைவர் கே. ரோசய்யா நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.