கும்பகோணத்தில் தெரு விளக்குகள் பராமரிக்கும் திட்டத்தில், தொண்டு நிறுவனத்திற்கும் அனுமதி : சமூக ஆர்வலர்களிடம் வரவேற்பு
Jul 4 2015 7:28AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொதுமக்களின் வரிப்பணத்தை பயனுள்ள திட்டங்களுக்கு செலவிடம் வகையில், கும்பகோணத்தில் தெரு விளக்குகள் பராமரிக்கும் திட்டத்தில், தொண்டு நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது, சமூக ஆர்வலர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள நகராட்சி, 2014-ம் ஆண்டிற்கான சிறந்த நகராட்சியாக தமிழக அரசின் விருதை பெற்றுள்ளது. இந்நிலையில், பொதுமக்களின் வரிப்பணத்தை பயனுள்ள திட்டங்களில் செலவிட பல்வேறு நடவடிக்கைகள் நகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக நகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளில் பராமரிக்கப்பட்டு வரும் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட தெருவிளக்குகளை பராமரிக்கும் பணியை, தனியாரிடம் ஒப்படைக்க நகராட்சி நிர்வாகம் தீர்மானித்தது. இதன் மூலம் சுமார் 5 லட்சம் ரூபாய் சேமிக்கப்படும் என்பதால், தெரு விளக்குகள் பராமரிப்பு பணியை தனியார் நிறுவனத்திடம் நகராட்சி தலைவர் திருமதி. ரத்னா சேகர் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் திரு. கலைச்செல்வன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.