முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு செயல்படுத்தி வரும் சிறப்பான சுகாதாரத் திட்டங்கள் அடங்கிய மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் தொடக்கம்
Jul 4 2015 6:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு செயல்படுத்தி வரும் சிறப்பான சுகாதாரத் திட்டங்கள் அடங்கிய மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. வரும் 12-ம் தேதிவரை 10 நாட்கள் இக்கண்காட்சி நடைபெறும்.
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கருணாகரன் தொடங்கி வைத்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமதி. விஜிலா சத்தியானந்த், திரு. K.R.P. பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 40 அரங்குகள் கொண்ட இந்தக் கண்காட்சியில், முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, தமிழகத்தில் நிறைவேற்றி வரும் மக்கள் நல்வாழ்வு திட்டங்கள், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், இருதய அறுவை சிகிச்சை, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை, சிறுநீரக கற்கள் உள்ள நோயாளிகளுக்கான உணவு முறைகள், எலும்பு புற்றுநோய்கட்டி அறுவைசிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் மற்றும் அவற்றுக்கான சிகிச்சை முறைகள் குறித்த விழிப்புணர்வு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
10 நாட்கள் நடைபெறவுள்ள இக்கண்காட்சியை பொதுமக்கள் பிற்பகல் 1 மணிமுதல் இரவு 8 மணிவரை பார்வையிடலாம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை பார்வையிட்டு தமிழக அரசின் சுகாதாரத்திட்டங்களை அறிந்து கொள்ளலாம். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அரசின் திட்டங்களை விளக்கும் புகைப்படங்களும் கண்காட்சி அரங்குகளில் இடம் பெற்றுள்ளன.
இதனிடையே, தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் பள்ளி மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மாதிரி கண்காட்சி நடைபெற்றது. இந்தியா, ஏற்கெனவே தயாரித்து அனுப்பியுள்ள ராக்கெட்டுகள், செயற்கைகோள்கள், அனுப்பவுள்ள செயற்கைகோள்கள் ஆகியவை குறித்து கண்காட்சியில் எடுத்துரைக்கப்பட்டது.