தமிழக அரசின் 104 மருத்துவ உதவி சேவை குறித்து சென்னையில் 104 விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
Jul 3 2015 1:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தொடங்கி வைத்த அரசின் 104 மருத்துவ உதவி சேவை மையத்தில் முதியவர்களும் பயன்பெறும் வகையில், சென்னையில் இன்று 104 விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
104 மருத்துவ உதவி சேவையில், நோய் அறிகுறி, அதற்கான உடனடி மருத்துவம், மருத்துவ பரிசோதனைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள், மருந்துகள் தொடர்பான விவரங்கள் மற்றும் மனநலம் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. இதனை, அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், மிகச் சிறப்பான சேவை ஏற்கெனவே வழங்கப்பட்டு வருகிறது. முதியவர்களும், தனிமைப்படுத்தப்பட்டவர்களும் இச்சேவையை பெற்று பயன்பெறும் வகையில், சென்னையில் இன்று, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தேவையான மருத்துவ உதவி மற்றும் மனநலம் தொடர்பான சேவைகளை இலவசமாக பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.