கன்னியாகுமரியில் இருசக்கர வாகனம் மீது கனரக லாரி மோதிய விபத்தில் பெண் பலி : விபத்தை ஏற்படுத்தி தப்பியோடிய லாரி ஓட்டுநருக்கு போலீசார் வலைவீச்சு
Jan 13 2024 11:49AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே இருசக்கர வாகனம் மீது கனரக லாரி மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலியானார். கொற்றவிளை பகுதியை சேர்ந்த ஞானதாஸ் என்பவர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் திருவனந்தபுரத்திற்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, குழித்துறை அருகே சென்றபோது, கேரளாவிற்கு கனிமவளம் ஏற்றிச் சென்ற கனரக லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஞானதாஸ் மனைவி பீனா சம்பவ இடத்திலேயே பலியானார்.