பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள் : எழும்பூர் ரயில் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
Jan 13 2024 11:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்களால், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை கோகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, சென்னையில் தங்கியிருந்து பணிபுரியும் நபர்கள், கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல படையெடுத்துள்ளனர். இதனால், எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஒரே நேரத்தில் ஏராளமானோர் குவிந்திருப்பதால் ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.