சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநிலத்தவர்கள் : பொங்கல் மற்றும் சங்கராந்தி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்
Jan 13 2024 11:34AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொங்கல் மற்றும் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வட மாநிலத்தவர்களும் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால், பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.