கோவையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்க சந்தைகளில் குவிந்த பொதுமக்கள் : வாசலில் வண்ண வண்ண கோலங்களிட்டு பொங்கல் பண்டிகைக்கு தயாராகி வரும் பொதுமக்கள்
Jan 13 2024 11:32AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்க பொதுமக்கள் சந்தைகளில் குவிந்தனர். காந்திபுரம் தினசரி சந்தையில் மஞ்சள் கிழங்கு செடி, கரும்பு,பூ,மாயிலை வாங்க மக்கள் பெரும் அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் கடந்த ஆண்டை விட கரும்பு விலை உயர்ந்துள்ளது.கரும்பு ஜோடி 120 முதல் 150 ரூபாய் வரை விற்பனையானது. இது கடந்த ஆண்டை விட விலை உயர்வு என பொதுமக்கள் தெரிவித்தனர். பொங்கல் பண்டிகை முன்னிட்டு தங்கள் வீடுகளில் வண்ணங்களால் அலங்கரித்து வாசலில் வண்ண வண்ண கோலங்கள் போட்டு தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகை திருநாளை கொண்ட மக்கள் தயாராகி வருகின்றனர்.